இரு நாட்டு உறவுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, வடகொரிய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் மலேசியாவில் இருந்து வெளியேறினர். கடந்த 2017-ம் ஆண்டு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்கின் சகோதரர் கொலை செய்யப்பட்டார். அதில் இருந்து வட கொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் மற்றொரு பிரச்னை மூலம் மேலும் அதிகரித்தது. அதாவது, மலேசியாவில் வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் (Mun Chol-myong)…