மலேசியாவில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் (KLANG) துறைமுகத்திலிருந்து இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு சரக்குக் கப்பல் ஒன்று கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தக் கப்பலில் வைக்கப்பட்டிருந்த கன்டெயினர்களில் இருந்து புகை வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கப்பலை உடனடியாக துறைமுகத்துக்குத் திருப்புமாறு மலேசிய கடல்சார் துறை உத்தரவிட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் தயார் நிலையில் இருந்தனர்….

