தேசிய நெடுஞ்சாலையில் டிரைலர் கவிழ்ந்து விழுந்ததில் டிரைவரும் கிளீனரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகாங் மாநிலத்தில் பெண்டாங்கில் (Bentong), கோலாலம்பூர் – கரக் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் டிரைலர் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பெண்டாங் நோக்கி சென்ற இந்த டிரைலரை திராங்கானுவை (Terengganu) சேர்ந்த ஹஸ்ரி ஆஸ்மி (44) ஓட்டி சென்றார். கிளீனராக யூசுப் மட் ஸைன் (63) இருந்தார்.சாலையில் சென்று கொண்டிருந்த டிரைலர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, டிவைடர் மீது மோதியது. பின்னர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது….

