கடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பெற்ற மூன்றாம் பரிசுதான் பள்ளிப் பருவத்தில் தமிழுக்காக நான் பெற்ற ஒரே பரிசு. அதுவும் அப்பா எழுதித் தந்ததை மனனம் செய்து எழுதிப் பெற்றது. அதன் பிறகு வேதியியலில் முதுகலைப் பட்டம் பெறும்வரை மொழி என்பது பள்ளிப்பாடம் என்ற அளவில் மட்டுமே இருந்தது. ஆண்டுகள் கழிந்து திருமணம் முடிந்து கணவருடன் சிங்கப்பூருக்கு வந்தேன். சீராகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில்…