நவீன இலக்கியம் – ஒரு அறிமுகம் இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் வாசகச் சூழலில் முன்னெப்போதைக் காட்டிலும் நவீன இலக்கியப் படைப்புகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. வாசிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் நவீன இலக்கியப் படைப்புகளைப் பற்றிய விரிவான விவாதங்களும், விமர்சனக் கட்டுரைகளும், நூல் அறிமுகக் கட்டுரைகளும் பெருகி வருகின்றன. இணையம் அதற்கு முக்கிய காரணம் என்றாலும் கூட, இவ்வாறான விரிவான வாசிப்பும், கவனமும் நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளான புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, ந.பிச்சமூர்த்தி போன்றவர்கள் எழுதிய மணிக்கொடி காலகட்டம் துவங்கி 1980-களின்…