கரோனா கிருமிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயிலிருந்து விடுபட பிரார்த்தனையைச் சொல்லி இந்தப் பாகத்திற்குள் செல்வோம். போரில்லாத காலம் என்று ஒன்று இருக்கலாம். பஞ்சமில்லாத காலம் என்று கூட ஒன்று இருக்கலாம். ஆனால் மனித சமூகத்தில், நோய் இல்லாத காலம் என்று ஒன்று இருக்கவே முடியாது. இப்போது கரோனா கிருமியின் தாக்குதலால் ஆயிரம் ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மாண்டுள்ளனர். இதற்கும் இந்தத் தொடருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்கள், தயவுசெய்து தொடர்ந்து படியுங்கள். யாரைப் பார்த்தாலும் கையைக்…