தேதி உயர்நிலை மாணவர்களுக்கான ஒரு மொழிபெயர்ப்புப் போட்டியை நடத்தியது. தொடர்ந்து அதே மாதம் 18ஆம் தேதி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது. இந்தப் பரிசு வழங்கும் விழாவோடு நகைச்சுவை நாவலர் புலவர் திரு இராமலிங்கம் அவர்கள் தலைமையிலான ஒரு பட்டிமன்றமும் ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டிமன்றத்தின் தலைப்பு இன்றைய இளையர்களிடம் பெரிதும் வலியுறுத்தவேண்டியது படிப்பா? பண்பாடா? படிப்புக்காக வாதாடியவர்கள் திரு முகமது சரீஃப், செல்வன் கார்த்திகேயன், செல்வி பார்கவி . பண்பாட்டுக்காக…