பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB) தெங்கா நீர்த்தேக்கத்தில் 70MW வரை மின்சாரம் தயாரிக்கக்கூடிய அளவில் மிதக்கும் சூரியப்பலகைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. 2021ல் இத்திட்டம் தயாராகும்போது இதில் கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் நாட்டின் மரீனா தடுப்பணை மற்றும் 5 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நாள்தோறும் இயக்கத் தேவையான மின்சாரம் கிடைக்கும். 2060ல் நாட்டின் தண்ணீர்த் தேவை இருமடங்கு ஆகும்போது நீர் சுத்திகரிப்புக்கான மின்சாரம் தன்னிறைவு பெற்றதாக இருக்கவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இத்திட்டம் வரையப்பட்டுள்ளது. மாறி வரும் சூழலில்…