தினம் தினம் நமக்கு ஏராளமான சம்பவங்கள் செய்திகளாக வந்தடைந்தபடியே இருக்கின்றன, வாட்ஸப்பிலும் முகநூலிலும் தொலைக்காட்சியிலும் நேரிலும். அவற்றின் வாழ்நாள் அதிகம்போனால் ஒரு நாள். மறுநாள் நினைவிருக்காது. ஆனால் சில சம்பவங்கள் விதிவிலக்கு. பயணவழி மோட்டலில் சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்புவதற்குள் வண்டியை கிளப்பிச் சென்ற பேருந்து ஓட்டுநரை, டாக்சியில் தொடர்ந்து விரட்டிச் சென்று கத்தியால் குத்திவிட்டுத் தப்பியவர் குறித்து என்றோ வாசித்த செய்தி இன்றும் நினைவிலிருக்கிறது. எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம்? என்று அங்கலாய்த்துக்கொள்ள இன்னொரு செய்தி கிடைத்துவிட்டதுதான் காரணம்….