கொரோனா தடுப்பூசி போட்டப்பட்ட குழுவுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தனது சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்கி இருக்கிறது. கொரோனா காரணமாக, மொத்த உலகமுமே மிரண்டு போயிருக்கிறது. ஒரு வருடத்தைத் தாண்டியும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே புதிய வகை உருமாறிய கொரோனாவும் பரவி வருகிறது. இந்தத் தொற்று காரணமாக, பல்வேறு நாடுகள் இன்னும் சர்வதேச விமானப் போக்குவரத்தை முழுவதுமாகத் தொடங்கவில்லை. பல நாடுகள் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி…