சிங்கப்பூரின் நீர்நிலைகளில் நெகிழிக் குப்பை (மைக்ரோ பிளாஸ்டிக்) சிறுகச் சிறுக நீர்வாழ் உயிரினங்களை அழித்துவருகிறது. ஒவ்வொரு மாதமும் 300 டன் குப்பை சிங்கப்பூரின் நீர்நிலைகளிலிருந்து அகற்றப்படுகிறது. கோவிட்-19 பரவத் தொடங்கிய பிறகு இவ்வாறு அகற்றப்படும் குப்பையின் அளவு மும்மடங்காகப் பெருகியுள்ளதை ‘வாட்டர்வேஸ் வாட்ச் சொசைட்டி’ அமைப்பின் தலைமை அதிகாரி யூஜின்ஹெங் குறிப்பிடுகிறார். தண்ணீர் பாட்டில்கள், நெகிழிப் பைகள் என்று கிடைக்கும் பொருள்கள் அத்தனையும் அகற்றிவருவதாகவும் சொல்கிறார். ஆனால், இவற்றை விட ஆபத்தானது நீரில் கலந்திருக்கும் குறுநெகிழித் துகள்கள்….