சிங்கப்பூரின் பசுமைப் பகுதிகளில் ஒன்றான கிராஞ்சி கானகத்தின் பெரும் பகுதி தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதியில் பல்லுயிர் தாக்க ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 70 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்தப் பசுமை கானகம் 40 வகை பறவைகளின் வாழிடமாக இருந்துள்ளது. அந்தப் பகுதியின் வான்வழி புகைப்படங்கள் ரயில் பாதையை ஒட்டிய சிறு பகுதியில் மட்டுமே மரங்கள் இருப்பதையும், மற்ற பகுதி முழுக்க மரங்கள் வெட்டப்பட்டு, ‘சுத்தம்’ செய்யப்பட்டுள்ளதையும் காட்டின. செய்திகளுக்கு பதிலளித்த ஜேடிசி கார்ப்பரேஷன் செய்தியாளர் ஒருவர்…