கிழக்கு ஜுரோங் பகுதியில் நேற்று இரவு 34 வயதுப் பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையில் 35 வயது ஆண் ஒருவரைக் குற்றவாளி என்று காவல்துறை கைதுசெய்து குற்றம் சாட்டியுள்ளது. பிப்ரவரி 16 செவ்வாய் இரவு 11:55 மணிக்கு கிழக்கு ஜுரோங் 32வது தெருவிலிருந்து உதவி வேண்டி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அங்கு அதிகாரிகள் உடனடியாகச் சென்று பார்த்தபோது 308ம் எண் பிளாக்கில் எந்த அசைவுமின்றி பெண் ஒருவர் கிடப்பதைக் கண்டனர். அங் தெங்…