தாங்கள் சுவைக்கக் கனி கிடைக்காதா என்று கணக்கிடாமல் மரக்கன்றுகளை நடத் தயாராக இருக்கும் உள்ளங்களாகவே புதியவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும் திரு மா.அன்பழகன் கவிஞர் க.து.மு.இக்பால் இவர்களைக் காண்கிறேன். நான் விடாமல் நச்சரித்ததும் ஒருநாள் இருவரும் எனது ரொட்டி கடைக்கு வந்திருந்தார்கள். அதிகம் பேசாவிட்டாலும் அர்த்தத்தோடு பேசும் அவர்களின் வார்த்தைகளை ரசித்துக் கொண்டிருந்தேன். சரி சாப்பிடலாமா என்றேன்… திரு மா.அன்பழகன் சாப்பிடலாம் ஆனால் நான் Poor Eater என்றார். சுவைக்க மனம் துடிக்கிறது. ஆனால், உடல் மறுக்கிறது என்றார்….