சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) நண்பகல் வரை 13 புதிய கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தனது தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவருமே வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும், சிங்கப்பூருக்கு வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. சமூகத்திலோ, வெளிநாட்டு தொழிலாளர் தங்குமிடங்களிலோ, உள்நாட்டில் பரவும் புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்தப் புதிய நோயாளிகள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் அதன் மூன்றாம் கட்ட…