அனுபவம்: சிவாநந்தம் நீலகண்டன் சிங்கப்பூரில் வேலை கிடைத்தபோது வேலைமுகவருக்கு நான் இரண்டுமாத ஊதியத்தைக் கட்டணமாக அளிக்க வேண்டியிருந்தது. கிடைக்கும் வேலைக்குத் தகுந்தாற்போலவும் முகவருக்கு முகவர் கொஞ்சம் கூடக்குறைச்சலாகவும் இக்கட்டணம் இருக்கும். ஒருமாத ஊதியத்தை இந்திய ரூபாயில் ஊரிலேயே கைக்காசாகத் தந்துவிட வேண்டும். இன்னொரு மாத ஊதியத்தை சிங்கை வந்து வேலையில் சேர்ந்தபிறகு ஆறுமாதத் தவணையில் கட்டினால் போதும். சிங்கையில் முதல் ஒருவருடம் கட்டாயமாக வேலைமுகவர் ஏற்பாடு செய்த வாடகை வீட்டில்தான் தங்கவேண்டும். அங்கு பிறருடன் அறையைப் பகிர்ந்துகொள்ள…