கோவிட்-19 தொற்றுநோய் பொருளாதாரத்தைத் தாக்கியிருக்கிறது. இதனால் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் சீர்குலைந்திருக்கலாம். ஆனால், இதிலிருந்து வலுவான நாடாக வெளிவரத் தகுந்த பொருளாதாரத் திட்டமிடலை சிங்கப்பூர் கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் கடந்த ஆண்டு 100 பில்லியன் டாலர்களை செலவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். “ஒற்றுமையுடன் வலுவாக வளர்வோம்” என்ற கருப்பொருளுடன் வெளிவந்துள்ள இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம்…