திம்புசு மரம் ஏன் இதன் பூக்களுக்கு மட்டும் இப்படி ஒரு மயக்கும் மணம்? அதுவும் கொஞ்ச காலத்துக்கு மட்டும்? கலைவேணிக்கும் இதே கேள்விகள் உண்டு. நாங்கள் முதல் முறை சந்தித்ததும் இந்தக் கேள்வியால்தானே. கைகோத்தபடியே மரத்தின் வேர் வரை மூக்கு எரிய உரசி முகர்ந்து பார்த்தோமே. இடையில் இருவர் மூக்கும் உரசிக்கொள்ள எங்கே பற்றி எரிகிறதென்று கூடச் சொல்லத் தெரியவில்லை. பொங்கோலில் ஒரு திம்புசு மரத்தை விடவில்லையே! நேரம் காலம் பார்க்காமல் முகர்ந்து முகர்ந்து திளைத்தோமே. மழைக்கு…