தனது தவறால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று, டிரைவர் மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் இருக்கிறது, கம்பார். இங்குள்ள ஓட்டல் ஒன்றின் பார்க்கிங் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை, தனது காரை நிறுத்த முயன்றார், ஒருவர். ஆனால், பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை தவறுதலாக மிதித்துவிட, கார் திடீரென வேகமெடுத்து, கடைக்குள் புகுந்தது. இதில் அங்கிருந்த 59 வயது சமையல்காரப் பெண், வோங் குவாய் யுங், தலையில் பலத்த காயம்…