மலேசியாவில் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து பல்வேறு நாடுகளில் திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டு, கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு திறக்கப்பட்டன. மலேசியாவிலும் கொரோனாவுக்குப் பிறகு பாதுகாப்பு வழிமுறைகளுடன் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் கோவிட்-19 அதிகரித்ததன் காரணமாகவும் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் திரையங்குகளை மீண்டும் திறக்க, மலேசிய அரசு…