கொரோனாவுக்கான அனைத்து வகைத் தடுப்பூசிகளுமே சிறந்தவைதாம் என்று மலேசிய பிரதமர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, உருமாறிய கொரோனாவும் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடும்…