சிங்கப்பூரில் கோவிட்-19 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள தகுதியான மலேசிய சரக்கு ஓட்டுநர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பயண எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) செவ்வாய்க்கிழமை (மார்ச் 9) தெரிவித்துள்ளது. “தடுப்பூசி தன்னார்வமானது மற்றும் தடுப்பூசிக்கான செலவை சிங்கப்பூர் அரசு ஏற்கும்” என்றும் கூறியுள்ள அமைச்சகம், “சரக்கு ஓட்டுநர்கள் மற்றும் உடன் வரும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் குறித்து மலேசிய அமைச்சகத்துடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்”, என்றும் தெரிவித்துள்ளது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள்…