அதிகரித்திருக்கும் ஆபத்துகளிலிருந்து வழிபாட்டாளர்களைப் பாதுகாக்க சிங்கப்பூரின் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், அதே நேரம் வழிபாட்டு இடங்கள் வரவேற்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்றும் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் திரு. கே.சண்முகம் தெரிவித்துள்ளார். மதத் தீவிரவாதத் தாக்குதல்களின் அச்சுறுத்தல் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பதால், சமூக விழிப்புணர்வு மற்றும் கூட்டாண்மை ஆகியவை சிங்கப்பூரைப் பாதுகாக்க மிக முக்கியமான கருவிகளாக இருக்கின்றன என்றும் அமைச்சர் சண்முகம் புதன்கிழமை (மார்ச் 10) அன்று தெரிவித்தார். வாட்டர்லூ…