சிங்கப்பூரின் முதல் தலைமுறை ஆட்சி அலுவலர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரும், ‘குரு’ என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான லீ சியோங் கியாம் (வயது 79) காலமானதை அடுத்து நினைவுச் செய்தி ஒன்றை பிரதமர் லீ சியன் லூங் பகிர்ந்திருக்கிறார். “லீ சியோங் கியாம் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொள்கிறேன். முதல் தலைமுறை அரசு ஊழியரான லீ, சிங்கப்பூருக்காக அதிகம் உழைத்தார். மக்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநராகவும், குடியிருப்பு குழுக்கள், அரசு மழலையர் பள்ளிகள்,…