உணவகத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை அளிக்காத நபருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மலேசிய அரசு விதித்துள்ளது. இதையடுத்து சமீபகாலமாக கொரோனா தொற்று கொஞ்சம் குறைந்து வருகிறது. கூடவே தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்ட சில பகுதிகளில், இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் கொரோனாவுக்கான விதிமுறைகளைச் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உணவகங்களில் சாப்பிட செல்பவர்கள் அங்கு தங்களைப் பற்றிய…