கோலாலம்பூரின் பசார் லாமா கெராமத் (Pasar Lama Keramat) மார்க்கெட்டில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மிகப்பழமையான மார்க்கெட்டுகளில் ஒன்று, பசார் லாமா கெராமத். இங்குள்ள கடை ஒன்றில், புதன்கிழமை மாலை, உள்ளூர் நேரப்படி 5:30 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. முதல் கடையில் பற்றிய தீ, மளமளவென பக்கத்துக் கடைகளுக்கும் பரவியது. இதனால் மார்க்கெட்டில் இருந்தவர் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து தீயணைப்பு துறைக்கு உடனடியாகத் தகவல்…