கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சமாளிக்கும் திறன் கொண்டு வெல்வோம் என்று துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட் தெரிவித்துள்ளார். லீ குவான் யூ சர்வதேச வணிகத் திட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றைத் தொடங்கிவைத்த பின் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். “லீ குவான் யூ குளோபல் பிசினஸ் பிளான் போட்டிகள் பத்தாவது பதிப்பின் இறுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது. கோவிட்-19 உலகத்தை புரட்டிப் போட்டுள்ளது. இதிலிருந்து நாம் மீளும் பாதை நிச்சயமற்றது. அதே நேரம் இந்தத்…