குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் உள்ள திராங்கானு (Terengganu) மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்று இருக்கிறது. இங்கு செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், ஹோண்டா பைக்கில் ஒருவர் வந்தார். குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஆறு குழந்தைகளும் அவர்களைக் கண்காணிக்கும் பெண் சூப்பர்வைசர் ஒருவரும் இருந்தனர். பைக்கில் வந்தவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை, சூப்பர்வைசரின் நெற்றியில் வைத்தார். சுட்டுவிடப்போவதாக மிரட்டிய அவர், இருக்கும் பணத்தை எடுத்துக்…