பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காக்கும் சீருடை அணிந்த சிங்கப்பூரர்களுக்கு நம் முழு ஆதரவையும் தரவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் SQ117 விமானம் கடத்தப்பட்டதையும், வெற்றிகரமாக மீட்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். “பழைய சிங்கப்பூரர்கள் SQ117 கடத்தப்பட்டதை நினைவு கூர்வார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்- மார்ச் 26, 1991 அன்று அந்த சம்பவம் நடந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவம் யாருக்கும் தீங்கின்றி முடிந்தது. மறுநாள் விடியற்காலையில்,…