சிங்கப்பூர் வாசகர் வட்டம் சிங்கப்பூர் நூலக வாரியம் இணைந்து நடத்தும் நிகழ்வு தொலைக்காட்சி, செய்தி சேனல்கள், அதன்பின் இணையம் என்று வந்த பின்பு தமிழ் வார இதழ்கள் மேலுள்ள மோகம் குறைந்துவிட்டதா என்ன? இணையத்தில் அவை வாசிக்கக் கிடைத்தாலும் நம் நினைவில் நிற்கும் இதழ்களின் பக்க வடிவமைப்பு இன்னும் நினைவில் உள்ளன. கல்கி, தேவன், அதன்பின் சாண்டில்யன், ஜெகசிற்பியன், ஆர்வி… அதன்பின் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி,சிவசங்கரி… அதன்பின் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் காலகட்டம் என்று கடந்துபோன தலைமுறைகளுடன் தொழில்நுட்ப மாற்றங்களும் இதழ்களின் முகத்தையே மாற்றிவிட்டன. படைப்பிலிருந்து அச்சுக்கு செல்லும்வரை பயணிக்கும் ஆனந்த விகடனின் பக்கங்களை அறிந்துகொள்ள வரும் 28.03.2021 ஞயிறு அன்று…