கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே கொரொனா என்னும் கொடுந்தொற்று நோயினால் உலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அதிலிருந்து இன்னும் மீளாத சூழலில், 2020 டிசம்பர் 24 அன்று தொ.ப என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது. தமிழர் வரலாற்று அறிஞரும் திராவிடப் பண்பாட்டு ஆய்வாளருமான தொ.ப. அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் அதேவேளையில், அவரின் கருத்தியலையும் ஆய்வுப் படைப்புகளையும் குறித்துப் பகிர்ந்துகொள்வது அந்த அறிஞருக்கு நாம்…