கோவிட்-19 பாதிப்பிலிருந்து இன்னும் பல துறைகள் மீண்டு எழாத சூழலில் தொடர்ந்து தொழிலாளர் நலனைப் பேணுவதில் தொழிலாளர் இயக்கம் எவ்வாறு பணியாற்றுகிறது என்பதைக் கேட்டறிந்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். “இந்த வாரம் இரண்டு தனித்தனி கூட்டங்களில் தொழிற்சங்கத் தலைவர்களுடன் உரையாடினேன். கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பல்வேறு தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்கிற சிந்தனையே அனைவரின் மனதிலும் இருந்தது.” “பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. சில துறைகள் மீளத் தொடங்கியுள்ளன; சில புதிய வாய்ப்புகளை…