பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள தாவாவ் அருகே இருக்கிறது செம்போர்னா. இங்கு வசித்து வரும் இந்தோனேஷியாவை சேர்ந்த இளைஞருக்கும் அவர் மனைவிக்கும் பிரச்னை என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு மூன்று மற்றும் ஐந்து வயதுகளில் இரண்டு குழந்தைகள் உள்ளன. மனைவி மீதான கோபத்தில் குழந்தைகளை கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் வீடியோ பதிவு செய்து, அதை போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். 26 விநாடி மற்றும்…