’’இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916 முதல் இருபது மொழிகளுள் ஒன்றாக நமது தாய்மொழியாம் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ் மொழிக்கென்று ஒரு நெடுங்கால வைப்புநிதி இல்லாததால், இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இந்த தமிழ்த்துறை இயங்காமல் உள்ளது. இந்த தமிழ்த்துறை மீண்டு அமைவதால், இலண்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் அரியணை ஏறும். மேலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இலண்டனில் பல்வேறு படிப்புகளுக்கும் வரும் நமது பிள்ளைகள், தமிழை ஒரு பல்கலைக்கழகப் பாடமாக தங்கள் படிப்புகளில் படித்து, அதன்…