மலாக்காவில் கூட்டணி அமைத்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மலாக்கா தெங்கா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது யமஹா ஆர்எக்ஸ்இஸட் இரு சக்கரவாகனம் திருடப்பட்டது குறித்து மாலிம் போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல மேலும் சில புகார்கள் வந்ததை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அபீர் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவரும் அவர் கூட்டாளிகளும் மலிம், தென்கெரா (Tengkera) மற்றும்…