அழகுநிலாவின் ‘ஆறஞ்சு‘ சிறுகதைத் தொகுப்பு – எழுத்தாளர் ஷாநவாஸ்

0
214

‘ஆறஞ்சு’ சிறுகதைத் தொகுப்பு அழகுநிலா வாசிப்பு: ஷா நவாஸ் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உலகில் இன்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆறஞ்சு என்ற பெயரோடு. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் அழகுநிலாவின் உரைநடை, இசைவான எளிமையான, வாசிப்பவரை சுலபத்தில் ஈர்க்கக் கூடியவற்றை, அவ்வளவாக அலங்காரங்கள் இல்லாத அதே நேரம் கதைக்குத் தேவையான அர்த்தத்தைத் தரும் விதத்தைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆறஞ்சு கதை சுய அனுபவமாகவோ, வேறு மனிதர்களின் அனுபவமாகவோ அல்லது உளச்சிக்கல் என எதுவாகவோ இருக்கலாம். அது எப்படி ஒரு சிறுகதையாக உருக்கொள்கிறது என்பதே முக்கிய சவால். பள்ளிக் குழந்தைகளின் மனநிலையைப் பளிச்சென்று மனத்தில் தைக்கும் விதத்தில் சித்தரிக்கப்பட்ட கதை. அழகுநிலாவின் இடத்தை இப்படிப்பட்ட கதைகளே நிலைநிறுத்தும். பச்சை பெல்ட் – இறந்துபோன தந்தையின் நினைவுகளில் வாடும் மகனைப் பற்றியது. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கதை நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. நினைவோட்டமாக அப்பா பச்சை பெல்ட் வழியே வருவது பிரஞ்சு எழுத்தாளர் மார்சல் புருஸ் தனது இறந்துபோன தாயைப் பற்றி இப்படி எழுதியிருப்பது நினைவுக்கு…

This content is for paid members only.
Login Join Now