வேட்கையோடு விளையாடு ஈரோடு கதிர் வாசிப்பு: மகேஷ் டேல் கார்னகிகளும் ஷிவ் கேராக்களும் ஜென்னிலிருந்தும் ஈசாப்பிலிருந்தும் கருத்துச் சொல்லி தங்களின் எண்ணத்தை மேலேற்றிச் சொல்வதைப் படித்த நமக்கு, ஈரோடு கதிர் தனது பயிலரங்குகளில் தான் நேரடியாகக் கண்டுணர்ந்ததை அப்படியே சொல்வதைப் படிக்க வித்தியாசமாக இருக்கிறது. எந்த மேற்பூச்சுகளும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே சொல்லும்போது அதன் வீச்சு பரந்துபட்டு நிற்கிறது. மாணவர்களுக்கு இவைதாம் பிரச்னைகளாக இருக்கமுடியும் என்ற நமது பொது எண்ணங்களை உடைத்தெறிகிறது இன்றைய மாணவர்களின் தேவைகள். நம்…