பொதுவாக இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் யாவும் தேர்ந்த படைப்பாளியின் நேர்மறை மனநிலையையும், பரந்த உலக அறிவையும், படைப்புகள்குறித்த கூரிய பார்வைகளையும் பறைசாற்றுகின்றன என்பதில் சந்தேகமில்லை.
வாழ்க்கை தொடக்கமும் முடிவுமின்றி போய்க்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் வருவதும்போவதும் காலம் முழுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எழுதித் தீர்க்க முடியாதது வாழ்க்கை. ஒவ்வொரு கணங்களுமே கதைகளுடனேயே கடந்து போகின்றன. அத்தனை முகங்களுமே கதைக்களங்கள்தாம்.
ஒவ்வொரு வாழ்க்கையையும் படித்துப் பார்த்தால் முன்னால் சொல்லப்பட்ட கதைகளையும் தாண்டிப் புதுப் புது வடிவம் கொண்டதாகவே இருக்கின்றன.