புத்தகம் – கவிஞர் க.து.மு. இக்பால்

0
410

புத்தகத்திற்கு நூல் என்று
பெயர் வைத்தவர்கள் புத்திசாலிகள்.
நூல்
ஆடைகளைத் தயாரிக்கிறது.
புத்தகம் மனிதர்களைத் தயாரிக்கிறது.
ஒன்று
கிழிந்த துணிகளைத் தைக்கிறது.
மற்றொன்று
கிழிந்த மனிதர்களைத் தைக்கிறது.
ஏதோ ஒருவகையில்
நூலும் புத்தகமும்
நம்மைக் கட்டிவைக்கின்றன.
நூல் புத்தகம் இரண்டுக்கும்
முன் உறவுகள் உண்டு.
புத்தகத்திலும் உயிர்மெய் எழுத்துக்கள்
நூல் ஆடைக்குள்ளும் உயிர்மெய் எழுத்துக்கள்.

This content is for paid members only.
Login Join Now