சிங்கப்பூரில் எங்கு நோக்கினும் பிரமாண்ட கட்டிடங்கள். இந்தக் கட்டிடங்கள் உருவாக, ஒரு வலுவான அடித்தளமாக இருந்தவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என்றால் அது மினகயாகாது. அவர்களின்றி நம் சிங்கப்பூரில் இத்துணை கட்டிடங்கள் எழும்பியிருக்காது. வெளிநாட்டு ஊழியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து இங்கு வந்து அல்லும் பகலும் உழைத்து வேலை பார்க்கின்றனர். அவர்களே சமைத்தோ கடைகளில் வாங்கியோ உணவருந்துகின்றனர். பாசத்துக்காக ஏங்கி வேலை பார்க்கும் அவர்கள் சாதாரண ஊழியர்கள் மட்டுமல்ல, இந்நாட்டின் தூண்கள் என்றே கூறலாம்.