‘சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம் இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நம் நாடு மகிழ்ச்சி, வளம். முன்னேற்றம் ஆகியவற்றை அடையும் வண்ணம் சமத்துவத்தையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதி மேற்கொள்வோமாக’ என்ற சிங்கப்பூரின் உறுதிமொழி சிங்கப்பூரின் பல கொள்கைகளை உள்ளடக்கியது என்றால், அது மிகையாகாது.