‘நீண்ட கால வரலாறு எங்களுடையது’ எனத் தொடங்கி நினைத்து ஏங்கும் பெருங்கதையாடலுக்கு மாற்றாகச் சிறிய மிகச்சிறிய கதையாடல்களைத் தென்கிழக்காசியப் பரப்பில் பேசுகிறார்கள். இத்தகைய பேச்சுகளெல்லாம் எனது மொழியான தமிழ் மொழியில் இலக்கியமாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த மகிழ்ச்சி எனது தாய்மொழி இலக்கியம் உலக இலக்கியத்தின் பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதால் உண்டாகும் மகிழ்ச்சி. இவை புலம்பெயர்ந்த தமிழ் எழுத்துகள் அல்ல: புலம் மறந்த தமிழ் எழுத்துகள்.