யவன். ஆனால், பாரதியிடம் சினம், ஆவேசம் மட்டும்தான் என்றில்லை, மகிழ்ச்சி என்றாலும் அப்படியே. ‘நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று காக்கை, குருவி, கடல், மலை அனைத்தையும் கட்டியணைத்துக் கூத்தாடுபவன். காதல் வந்தால் சொல்லவே வேண்டியதில்லை. ‘வதுவை முறைகள் பின்பு செய்யலாம் முத்தத்தை முதலில் கொடு’ என்று கேட்பவன். மொத்தத்தில் பாரதி ஓர் உணர்ச்சிக் குவியல் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவன் அனைத்தையும் உணர்ச்சிகரமாகத்தான் அணுகினானா? தன்னைச் சுடர்மிகும் அறிவுடன் சிவசக்தி படைத்துவிட்டதாகச் சொன்னவன் அந்த அறிவின் கூர்மையைத் எந்த அளவுக்குத் தனக்குத் துணையாகக் கொண்டான்?