தற்போதைய காலகட்டத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பணப்பரிமாற்றம் செய்ய ஸ்விப்ட் (SWIFT) என்னும் அமைப்பின் வழியாகத்தான் அனுப்ப முடியும். அந்த ஸ்விப்ட் அமைப்பில் அமெரிக்கா கட்டளையிட்டு ஒரு நாட்டின் மேல் பொருளாதாரத்தடைகள் விதித்து விட்டால், அந்த நாடு பொருளாதார ரீதியாகத் தனிமைப் படுத்தப்பட்டு விடும். வடகொரியா, க்யூபா, ஈரான் போன்றவை அத்தகையத் தடைகளுக்குள்ளாகி சொல்லொணாத் துன்பம் அனுபவித்து வருகின்றன.
பெருவணிக மின்பணம் வழியாகப் பணப் பரிமாற்றம் செய்யும்போது, அமெரிக்க அரசு பிற நாடுகளின்மேல் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மின்பணப் பரிமாற்றத்தைத் தடை செய்ய முடியாது. ஏனெனில் அமெரிக்காவின் நேரடித்தலையீட்டின் கீழ் உள்ள ஸ்விப்ட் உதவியின்றி மற்றொரு நாட்டுடன் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.