திருமதி சித்ரா ரமேஷ் அவர்களின் ‘பறவைப் பூங்கா’, 14 சிறுகதைகளின் தொகுப்பு என்பதைக் காட்டிலும் அவருடைய முன்னுரையையும் ஒரு சிறுகதையாகச் சேர்த்துக்கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்ற வைத்துள்ளது.
தன் மனதுக்குத் தோன்றிய கேள்விப்பட்ட, நேரிடையாகக் கண்ட காட்சிகள் அனைத்தையுமே வாசகனின் கண்முன்னே தான் கையாளும் எளிமையான வார்த்தைகளின் மூலம் காட்சிப்பூர்வமாக்கியுள்ளார். உதாரணமாகக் ‘கழிவுகள்’ எனும் சிறுகதையில், “டாக்டரைப் பார்த்தால் முகமூடி அணிந்த அணியாத கொள்ளைக்காரன் போல் தோன்றியது’ என்பது… நாமும் மருத்துவமனை செல்லும்போது அப்படித்தானே நினைத்துக்கொள்கிறோம்.