சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் கடந்த 11 ஆண்டுகளாக ஆண்டுதோறும் வழங்கிவரும் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு, அதன் 12வது ஆண்டு விழாவில்,
‘தி சிராங்கூன் டைம்ஸ்’
ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவரான
சிவானந்தம் நீலகண்டனின்
‘கரையும் தார்மீக எல்லைகள்’
(அகநாழிகை வெளியீடு, 2019) என்னும்
கட்டுரைத் தொகுதி நூலுக்கு அளிக்கப்பட்டிருப்பதில்
மிகுந்த பெருமை அடைகிறோம்.