வாழ்க்கை என்பது சங்கடங்கள் நிரம்பிய ஒன்று. வாழ்வதைப் போல சங்கடமான விஷயம் வேறு எதுவுமே இல்லை. எந்த வயதில் யோசித்தாலும் நாம் ரொம்ப வருஷம் இந்த உலகத்தில் இருந்துவிட்டோமோ என்று சோர்வாக இருக்கிறது. ஆனால்கூட இன்னும் கொஞ்சம் அந்த வெளிச்சத்தை நாம் நம் கைகளில் ஏந்திக் கொள்வதற்காகவே நாம் வாழ்கிறோம்.