புதுமைப்பித்தனின் எழுத்தால் கவரப்பட்டுத் தன்னைப் புதுமைதாசனாக அறிவித்துக்கொண்ட எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் ‘பரோபகாரி’ (1956) சிறுகதையையும், புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ (1934) கதையையும் ஒப்பிட்டுச் சில விமர்சனங்களை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன். இரண்டு கதைகளுமே இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. கதை சொல்லியே நேரிடையாக வாசகர் முன்னமர்ந்து கதை சொல்வது, இடையிடையே வாசகரிடம் கேள்விகள்கேட்டு அதற்குத் தானே பதில் சொல்வது, இறுதியில் வாசகரிடம் சொல்லிவிட்டு அல்லது கேட்டுவிட்டு விடைபெற்றுக்கொள்வது, ஏழ்மை மற்றும் விபச்சாரம் போன்ற சமூகத்தின் கவலைக்குரிய விஷயங்களையும் எள்ளலோடு வர்ணிப்பது ஆகிய…